ஹரீன் பெர்ணான்டோவுக்கு மாரடைப்பு! மருத்துவமனையில் அனுமதி
#SriLanka
#Hospital
Yuga
3 years ago
பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், நாளை (30) அவருக்கு மீண்டும் இருதய அறுவை சிகிச்சையொன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சில மாதங்களுக்கு முன் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக நேற்றிரவு இவ்வாறு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், நேற்றைய தினம் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று சாதாரண வார்ட்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.