நாளை மருத்துவமனைகளில் ஐந்து மணி நேர வேலைநிறுத்தம் - சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவிப்பு
#strike
#SriLanka
#Hospital
Prasu
2 years ago
நாளைய தினம் (08) 5 மணி நேர வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
7,500 ரூபாய் கொவிட் அவதான கொடுப்பனவை ரத்துச் செய்தமைக்கு எதிராக மற்றும் மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, நாளை காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் ஐந்து மணி நேர வேலைநிறுத்தத்தைத் மேற்கொள்ள அவர்கள் தயாராகி வருகின்றனர்.