நுவரெலியாவில் நடந்த பயங்கரம்: இரண்டு சிறுவர்கள் உட்பட ஐந்து பேர் பலி (Photos)
#NuwaraEliya
#Death
Prathees
2 years ago
நுவரெலியா, ராகலவத்த பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 11 மற்றும் ஒரு வயதுடைய இரண்டு சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
உயிரிழந்தவர்களில் 60 வயது ஆண் மற்றும் இரண்டு பெண்களும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.
குறித்த தீ விபத்து தொடர்பாக மேலதிக விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை. ராகல பொலிஸார் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.