20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசியாக பைசர் வழங்க அரசாங்கம் முடிவு
Reha
2 years ago
இலங்கையில் 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மூன்றாவது டோஸ் பூஸ்டர் தடுப்பூசி வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக மருந்து வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளாா்.
இதற்காக 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பைசர் தடுப்பூசியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், மூன்றாவது டோசுக்கு 14 மில்லியனுக்கும் அதிகமான பைசர் தடுப்பூசிகளுக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவா் தொிவித்துள்ளாா்.