நல்லூர்க் கந்தசுவாமி நிர்வாக அதிகாரி சிவபதமடைந்தார்
#Jaffna
#Nallur
Yuga
2 years ago
வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரி இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியார் இன்று சனிக்கிழமை(09.10.2021) தனது 92 ஆவது வயதில் யாழில் காலமானார்.
1929 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்-15 ஆம் திகதி பிறந்த இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியார் 1964 ஆம் ஆண்டு டிசம்பர்-15 ஆம் திகதி முதல் இன்று வரை நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் நிர்வாக அதிகாரியாகச் சிறப்பாகப் பணிகள் ஆற்றி வந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.