நல்லூர்க் கந்தசுவாமி நிர்வாக அதிகாரி சிவபதமடைந்தார்

#Jaffna #Nallur
Yuga
2 years ago
நல்லூர்க் கந்தசுவாமி நிர்வாக அதிகாரி சிவபதமடைந்தார்

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரி இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியார் இன்று சனிக்கிழமை(09.10.2021) தனது 92 ஆவது வயதில் யாழில் காலமானார்.

1929 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்-15 ஆம் திகதி பிறந்த இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியார் 1964 ஆம் ஆண்டு டிசம்பர்-15 ஆம் திகதி முதல் இன்று வரை நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் நிர்வாக அதிகாரியாகச் சிறப்பாகப் பணிகள் ஆற்றி வந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!