60 இலங்கையர்களின் பில்லியன் கணக்கான பணம் வெளிநாட்டு வங்கிகளில்?
#SriLanka
Prathees
2 years ago
வெளிநாட்டு வங்கிகளில் 60 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் பில்லியன்களை வைப்புச் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்களில் 20 க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள் உள்ளனர் என அமெரிக்க முன்னணி பத்திரிகை மூலம் உறுதிப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சட்ட மற்றும் சட்டவிரோத வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களும் அதில் உள்ளனர்.
பண்டோரா அறிக்கையினைத் தொடர்ந்து அவர்களில் பெரும்பாலோர் குழப்பமான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிங்கள ஊடகமொன்று இது தொடர்பாக செய்தியை வெளியிட்டுள்ளது.