எரிந்த நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு
#Death
#Police
#Investigation
Prathees
2 years ago
ஹங்வெல்லா பகுதியில் உள்ள ஓய்வு இல்லம் அருகே எரிந்த நிலையில் ஒருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இன்று (10) காலை குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இல்லத்திற்கு முன் கல்லால் கட்டப்பட்டிருந்த வாங்கொன்றில் சடலம் கண்டெடுக்கப்பட்டது
உயிரிழந்தவர் நுகேகொடையை சேர்ந்த 70 வயதுடையவர் என பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அந்த நபர் நேற்று (09) பிற்பகல் ஓய்வு இல்லத்திற்கு வந்து தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. ஹங்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.