மேலும் 35 பேர் கொரோனாவுக்கு பலி

Prabha Praneetha
4 years ago
மேலும் 35 பேர் கொரோனாவுக்கு பலி

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 35 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.

குறித்த அனைவரும் நேற்றைய தினம் (08) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,331 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் நாட்டில் இதுவரை 525,663 கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இவர்களில் 480,097 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4