உலக மக்களுக்கு அசத்தலான குட் நியூஸ் - கொரோனாவை ஒழிக்க வருகிறது மாத்திரை!

Keerthi
4 years ago
உலக மக்களுக்கு அசத்தலான குட் நியூஸ் - கொரோனாவை ஒழிக்க வருகிறது மாத்திரை!

சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் பரவிய, கோவிட் - 19 எனப்படும், கொரோனா வைரஸ் தொற்று இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், பிரிட்டன், பிரசில் உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, கிட்டத்தட்ட ஓராண்டு காலம் ஊரடங்கு போன்ற நடவடிக்கைகளை உலக நாடுகள் அமல்படுத்தியதால், பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, விஞ்ஞானிகளின் அதி தீவிர முயற்சியால், கொரோனா தொற்றை ஒழிக்க, தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியா, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இத்தாலி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில், அந்தந்த நாட்டு விஞ்ஞானிகளின் கடின உழைப்பால், தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தற்போது வெற்றிகரமாக மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த மெர்க் என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம், கொரோனா தொற்றுக்கான மருந்தை மாத்திரை வடிவில் தயாரித்து உள்ளது. இந்த மருந்துக்கு ஒப்புதல் பெற, எப்.டி.ஏ., எனப்படும் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பிடம், மெர்க் நிறுவனம் தனது மருந்தையும், மருந்தை ஆய்வு செய்த அறிக்கையையும் சமர்ப்பித்து உள்ளது. அடுத்த ஒரு வாரத்தில் இதற்கான முடிவு அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

மெர்க் நிறுவனத்தின் மருந்து மட்டும் ஒப்புதல் பெற்றால் அடுத்த 3 மாதங்களில் உலகமும் முழுவதும் அனைவருக்கும் கொரோனா தடுப்பு மாத்திரை வழங்க முடியும். உலகளவில் பல நிறுவனங்கள் கொரோனாவுக்கு எதிராக மாத்திரை தயாரிக்கும் முயற்சியில் இறங்கி இருந்தாலும், மெர்க் நிறுவனத்தின் மாத்திரை மட்டுமே ஒப்புதல் அளவிற்கு சென்றுள்ளது. மாத்திரை தயாரிப்பு எளிது என்பதால் உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு வேகமாகத் திரும்ப முடியும் என கூறப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4