இலங்கையை வந்தடைந்தார் இந்திய இராணுவ தளபதி
#India
#SriLanka
Prathees
2 years ago
இந்திய இராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நாராவன, ஐந்து நாள்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று இலங்கையை வந்தடைந்தார்.
இந்தியாவில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் யுஎல் -122 விமானத்தில் காலை 11.05 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவருடன் நான்கு சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
இந்தக் குழுவை வரவேற்க இலங்கை இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் ஏராளமானோர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இராணுவ தளபதி ஷவேந்திர சில்வாவின் அழைப்பை ஏற்று இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்ட அவர, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பல அரசாங்க தலைவர்களை அவர் சந்திக்கவுள்ளார்.