பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொவிட் தொற்றினால் 40,224பேர் பாதிப்பு- 28பேர் உயிரிழப்பு!

Keerthi
2 years ago
பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொவிட் தொற்றினால் 40,224பேர் பாதிப்பு- 28பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 40ஆயிரத்து 224பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 28பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட நான்காவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக 81இலட்சத்து 93ஆயிரத்து 769பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரு இலட்சத்து 37ஆயிரத்து 763பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 13இலட்சத்து 69ஆயிரத்து 311பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 780பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக 66இலட்சத்து 86ஆயிரத்து 695பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.