யாழில் 13 வயதான சிறுமி துஸ்பிரயோகம்
Prabha Praneetha
2 years ago
யாழ்ப்பாணத்தில் கொக்குவில் பகுதியில் 13 வயதுச் சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் மாநகரில் இயங்கும் ஒளிப்படப்பிடிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந் நிலையில் , சம்பவத்தின் பின்னணி தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
, சந்தேக நபரால் சிறுமி தொடர்பில் எடுக்கப்பட்ட சில காணொளியை வெளியிட முயற்சித்த சிலரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
அதோடு கைதான சந்தேகநபர் யாழ் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.