குளிர்காலத்திற்கேற்ற மட்டன் ரோஸ்ட் செய்வது எப்படி?

#Cooking
குளிர்காலத்திற்கேற்ற மட்டன் ரோஸ்ட் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

  • நெய் - 2 டேபிள் ஸ்பூன்
  • மட்டன் - 1 கிலோ
  • மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
  • கிராம்பு- 4-5
  • பட்டை - 1
  • மிளகு - 10
  • கடுகு - 1/2 டீஸ்பூன்
  • சிவப்பு மிளகாய் - 4
  • சீரகம் - 1 டீஸ்பூன்
  • மல்லி விதைகள் -  1 டேபிள் ஸ்பூன்
  • வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
  • இஞ்சி பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
  • பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
  • உப்பு (தேவையான அளவு)

செய்முறை: 

  1. முதலில் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில், எடுத்து வைத்துள்ள நெய் -ஐ ஊற்றிச் சூடு செய்யவும். பின்பு அதில் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
  2. பின்பு இதில் சிறிது சிறிதாக வெட்டி வைத்துள்ள மட்டன், இஞ்சி, பூண்டு பேஸட் ஆகியவை சேர்த்து, மட்டன் நன்கு பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும். 
  3. அடுப்பின் தீயை மிதமாக வைத்துக் கொண்டு வதக்க வேண்டும். பின்பு 2 கப் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். 
  4. பின்பு குக்கரினை மூடி போட்டு மூடி விட்டு, 4 விசில் வரும் வரை காத்திருக்கவும். தற்போது நன்கு வெந்துள்ள மட்டனை மட்டும் தனியாக எடுத்து வைக்கவும்.
  5. பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் சிவப்பு மிளகாய், மல்லி விதைகள், கிராம்பு பட்டை, கடுகு ஆகியவை சேர்த்து நன்கு வறுக்கவும். 
  6. இதன் சூடு ஆறிய பின்பு, மிஞ்சியில் போட்டுப் பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். இதில், தேவைப்பட்டால், சிறிதளவு பூண்டு பேஸ்டை சேர்த்துக் கொள்ளலாம்.
  7. தற்போது கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி அதில், வேக வைத்த மட்டன் துண்டுகள், பின்பு அரைத்து வைத்துள்ள மசாலா பொடியைச் சேர்த்து நன்கு கலக்கவும். 
  8. 7 முதல் 8 நிமிடங்கள் வரை அடுப்பின் தீயைக் குறைத்து வைத்து வறுத்து எடுத்தால் ருசியான மட்டன் நெய் ரோஸ்ட் தயார்.

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!