மேதகு 2, ட்ரெயிலர் வெளியீடு. - நடிகர் யார் தெரியுமா...?

Nila
2 years ago
மேதகு 2, ட்ரெயிலர் வெளியீடு.  - நடிகர் யார் தெரியுமா...?

மேதகு 2, ட்ரெயிலர் வெளியீடு. உண்மை கதையை மையமாக வைத்து உருவாகியுள்ளதாம். வந்த பின்னரே தெரியும் உண்மை. 

ஆம். சில மாதங்களுக்கு முன்னர் மேதகு 1 வெளியாகி உலகளாவியரீதியில் பிரபாகர பக்தர்களால் கொண்டாடப்பட்டதும், சிலரால் விமர்சிக்கப்பட்டதும் அறிந்ததே.

அந்தவகையில், தற்போது மேதகு படத்தை தொடர்ந்து தற்போது மேதகு 2 படம் உருவாகியுள்ளது. உங்களுக்கு அருகாமையில் இருக்கும் ஸ்மார்ட் ஹோம்சுக்கு உங்களை வரவேற்கிறோம்! 

மேலும் தெரிந்து கொள்ளுங்கள் விரைவில் திரைக்கு வர காத்திருக்கும் இந்தப் படத்தின் ட்ரெயிலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

நடிகர் சிபி சத்யராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த ட்ரெயிலரை வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

மாநாடு படம் பார்த்து பாராட்டி தள்ளிய பிரபல இளம் நடிகர். லைக்ஸை குவிக்கும் டிவிட்! மேதகு படம் டி கிட்டு இயக்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓடிடி தளத்தில் வெளியான படம் மேதகு. விடுதலை புலி இயக்கத்தின் தலைவரான வேலுபிரபாகரனின் வாழ்ககையை மையமாக கொண்டு இந்தப் படம் உருவானது. 

ரியாஸ் என்பவர் படத்தை தயாரித்ததுடன் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளார். கிரவுட் பண்டிங் இந்தப் படம் கிரவுட் பண்டிங் முறையில் தயாரிக்கப்பட்டது படத்திற்கு பிரவீன் குமார் இசையமைத்துள்ளார். 

பிரபாகரனின் பிறப்பு மற்றும் விடுதலைப்புலிகள் அமைப்பு உருவான வரலாறு இதில் கதைக்களமாக எடுக்கப்பட்டுள்ளது. பிரபாகரனின் ஆரம்ப கட்ட வாழ்க்கை இதில் படமாக்கப்பட்டுள்ளது. வேலு பிரபாகரன் வாழ்க்கை வரலாறு தெருக்கூத்து வழியாக பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு கூறப்பட்டுள்ளது. 

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகள் உள்ளிட்டவை இந்தப் படத்தில் காணப்படுகிறது. ஆயினும் சில சினிமாத்தனங்களும் படத்தில் காணப்படுகின்றன. அறிமுக இயக்குநர் கிட்டு இந்த மிகப்பெரிய களத்தை எடுத்து அதை சிறப்பாகவும் செய்து பாராட்டுக்களை அள்ளுகிறார். கிட்டு இயக்கம் வரலாற்று தகவல்கள் நிறைந்த இந்தப் படத்தை சிறப்பாக தர முயற்சி அதில் வெற்றியும் பெற்றிருந்தார் கிட்டு. கேரக்டர் தேர்விலும் மெனக்கெட்டிருக்கிறார் இயக்குநர். குறிப்பாக பிரபாகரனாக நடித்திருக்கும் அந்த சிறுவன் சிறப்பான தேர்வு. சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் அது பல இடங்களில் தெரிகிறது.

எது எதுவாக இருப்பினும் படக்குளுவால் உண்மையான வரலாற்றை கொண்டுவரமுடியாது எனவும், அப்படி வெளிவ ந்தால் அது வியாபாராரீதியாக படு தோல்வியையும் பிரபாகர பக்தர்களால் எதிர்க்கப்படும் ரஎனவும் கூறப்படுகிறது.
அதனால் இப்படத்தை பிரபாகரனுடைய அபிமானிகளை திருப்திப்படுத்தும்வகையில் மட்டுமே உருவாகும் என கூற‌ப்படுகிறது.