கோயிலில் உடைக்கும் தேங்காயில் தேங்காய் பூ இருந்தால் அறிந்து கொள்ள வேண்டிய சில விடயங்கள்?

Prasu
2 years ago
கோயிலில் உடைக்கும் தேங்காயில் தேங்காய் பூ இருந்தால் அறிந்து கொள்ள  வேண்டிய சில விடயங்கள்?

நம்முடைய ஊர்களில் தேங்காய் இல்லாத சமையலே கிடையாது. தேங்காய் மிக முக்கியமான உணவுப் பொருளாக மட்டுமில்லாமல் மருந்து பொருளாகவும் இருக்கிறது. எல்லாவிதமான சுப காரியங்களிலும் தேங்காய் பயன்படுத்தப்படுகிறது.அதுமட்டுமல்லாமல் தெய்வங்களுக்கு செய்யக்கூடிய பூஜைகளிலும் இந்த தேங்காய் இடம்பெறுகிறது. நன்றாக விளைந்த தேங்காயில் தேங்காய் பூ இருப்பதை நாம் பார்த்திருப்போம். இந்த தேங்காய்ப் பூவும் பல மருத்துவ ஆரோக்கிய குணங்களை கொண்டது. அதுமட்டுமல்லாமல் இது மிகவும் சுவையாகவும் இருக்கக்கடியது.பொதுவாக கோவில்களில் தேங்காய் உடைக்கும் பொழுது அந்த தேங்காய் உடையும் விதத்தை வைத்து சகுனங்களை சொல்வார்கள். இதில் கோவிலில் நீங்கள் தேங்காயை உடைக்கும் பொழுது அதில் தேங்காய் பூ இருந்தால் அது நல்ல சகுனமா கெட்ட சகுனமா என்பதை பற்றி பார்க்கலாம். கோவிலில் தேங்காய் உடைக்கும் பொழுது அதில் தேங்காய் பூ இருந்தால் அது மிகவும் நல்ல சகுனமாக பார்க்கப்படுகிறது.

இது அதிக அளவிலான பண வரவை குறிக்கிறது. உங்களுக்கு வந்து சேர வேண்டிய பணம் எந்த இடத்தில் இருந்தாலும் உடனடியாக அது உங்களுடைய கைக்கு வந்து சேரும் என சொல்லப்படுகிறது. மேலும் யாருக்காவது நீங்கள் பணத்தை கடனாக கொடுத்து இருந்தால் அந்தப் பணம் உங்கள் கைக்கு வந்து சேரும் எனவும் சொல்லப்படுகிறது.

நீங்கள் தொழில் செய்பவராக இருந்தால் நீங்கள் செய்யக்கூடிய தொழில் உங்களுக்கு அதிக அளவு லாபம் வந்துசேரும் என்பதையும் இது சொல்கிறது. அதுபோல நீங்கள் ஏதாவது புதிய முயற்சிகள் எடுப்பதாக இருந்தாலும் இந்த நேரத்தில் தைரியமாக அதை எடுக்கலாம் என சொல்லப்படுகிறது.

நீங்கள் எதிர்பார்த்திராத பல நல்ல விஷயங்கள் இந்த காலகட்டத்தில் உங்களுக்கு நடக்கும் எனவும் சொல்லப்படுகிறது. ஒட்டுமொத்தத்தில் நீங்கள் தேங்காய் உடைக்கும் பொழுது அதில் தேங்காய் பூ இருந்தால் மிகப்பெரிய நல்ல பலன்களை உங்களுக்கு கொடுக்கும் என சொல்லப்படுகிறது.