எந்நேரமும் சண்டை போடும் 7 ராசி ஜோடிகள்....

#Astrology
எந்நேரமும் சண்டை போடும் 7 ராசி ஜோடிகள்....

திருமண வாழ்வில் எப்போதும் சண்டை போட்டுக் கொள்ளும் 7 ராசி ஜோடிகள் பின்வருமாறு...

​விருச்சிகம் மற்றும் மேஷம்

மேஷம் மற்றும் விருச்சிக ராசியினர் செவ்வாய் பகவானை அதிபதியாக கொண்ட ராசிகள். இவர்களிடம் போர் குணம், வலிமை, ஆற்றல் அதிகம் இருக்கும். அதனால் இவர்கள் திருமணம் செய்துகொண்டால், விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய இவர்கள் இடையே போட்டித் தன்மை அதிகமாக இருக்கும்.

திருமண வாழ்க்கை தொடக்கத்தில் இவர்களிடையேயான செக்ஸ் வாழ்க்கையில் ஆச்சரியமான அளவு இன்பத்தை அனுபவிப்பார்கள். இருப்பினும் போகப்போக இருவரிடையே அதிகாரப் போராட்டம் அதிகரிக்கும். யார் யாரை கட்டுப்படுத்துவது என்பதில் சண்டை அதிகரிக்கத் தொடங்கும்.

​கடகம் மற்றும் கும்பம்

சந்திரனை அதிபதியாக கொண்ட கடக ராசியினர் மிகவும் மென்மையானவர்கள் மற்றும் பாதுகாப்பற்று இருப்பதாக உணரக்கூடியவர்கள். ஆனால் கும்ப ராசியினரோ மிகவும் சுதந்திரமானவர்கள். எதையும் அதிகமாக பகுப்பாய்வு செய்யக்கூடியவர்களாகவும், பிறர் மீது பெரியளவில் பாசம், பரிவு கொண்டவராக இருக்கமாட்டார்கள்.

கடக ராசியினர் உணர்ச்சிப்பூர்வமானவர்களாகவும் துணையிடம் நெருக்கத்திற்காக ஏங்குபவர்களாக இருப்பார்கள். ஆனால் கும்ப ராசியினர் பெரியளவில் மதிக்காத குணத்துடன் இருப்பதால் மெல்லமெல்ல சண்டைகள் ஆரம்பிக்கும். இருவரிடையே ஈர்ப்பும், உணர்வின்மையுடன் இருப்பதால் படுக்கையில் பல விவாதங்கள் தலைதூக்கும்.

தனுசு மற்றும் ரிஷபம்

குரு - சுக்கிரன் இருவரும் எப்படி எதிரெதிர் துருவங்களோ, அதே போல இவர்களை அதிபதியாக கொண்ட தனுசு மற்றும் ரிஷப ராசியைச் சேர்ந்த தம்பதிகளின் ஆசைகளும் எதிரெதிராக இருக்கக்கூடும்.

தனுசு ராசியினர் தன் குடும்பம், தொழில் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிப்பவராகவும், அவர்களுக்காக அலைந்து திரிபவர்களாக இருப்பார்கள்.

ஆனால் ரிஷப ராசியினர் பிடிவாத குணமும், சுக போகவாதிகளாக இருப்பார்கள். எனவே தனுசு ராசியினரின் துணை மீதான காதல் மெல்ல மெல்ல குறைய ஆரம்பிக்கும். பின்னர் அதுவே சண்டையாக மாறக்கூடும்.

மேஷம் மற்றும் ரிஷபம்

மேஷம் - ரிஷப ராசியினருக்கு லட்சியம் மற்றும் இருவரிடையே வலுவான விருப்பமும் இருக்கும். இருப்பினும் மேஷ ராசியினர் நல்ல நம்பிக்கையும், மன தைரியமும் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் நிலையான விஷயத்தை விரும்புவார்கள்.

ஆனால் ரிஷப ராசியினர் பொறுமை இல்லாதவர்களாகவும், தற்காலிக சுக போகத்திற்காக நிலையற்ற பொருட்கள் மீது ஆசைப்படுவார்கள். இதனால் இருவரிடையே பொறுமை குறைந்து அடிக்கடி சண்டையிட்டுக் கொள்வார்கள்.

மகரம் மற்றும் தனுசு

தனுசு ராசியினர் சாகச பயணம் மேற்கொள்ள விரும்புவார்கள். சாதாரணமாக பெரியளவில் சகிப்புத் தன்மை இல்லாதவராக இருப்பார்கள். ஒரே மாதிரியான விஷயங்களைத் தொடர்ந்து செய்ய விரும்புவார்கள்.

மகர ராசியினர் பழைய நடைமுறையை விடுத்து, புதிய விஷயஙக்ளை செய்ய முயற்சி செய்வார்கள். இவர்களிடையே சிறிய மனகசப்பாக இருந்தாலும் உடனே சமரசத்துக்கு வராவிட்டால் உறவில் பெரிய விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.

சிம்மம் மற்றும் கன்னி

இந்த இரண்டு ராசிகளுக்கிடையே பொதுவான விஷயம் என்று ஒன்று இல்லை எனலாம். இருவருமே தனக்கென தனித்தனிப் பெருமைகள் நிறைந்தவர்கள். கன்னி ராசியினர் பெரியளவில் உணர்ச்சிகளை வெளிப்படுத்த மாட்டார்கள். ஆனால் சிம்ம ராசியினர் எப்போது தன் உணர்ச்சிகளை, ஆதங்கத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொள்ளாத நபர்களாக இருப்பார்கள்.

​துலாம் மற்றும் கடகம்

துலாம் ராசியினர் திருமண வாழ்வில் பிரச்னை என்று வந்துவிட்டால் அதை சமாளிக்காமல் ஒதுங்கி ஓடக்கூடியவர்களாக இருப்பவர்கள். கடக ராசியினரோ எப்பேற்பட்ட சூழலாக இருந்தாலும் நம்பிக்கையுடன் சேர்ந்து வாழ ஆசைப்படுவார்கள். அதே சமயம் சிறிய பிரச்னையைக் கூட பெரிதுபடுத்திப் பார்க்கும் மனதால் அடிக்கடி மனக்கசப்பு ஏற்படும்