இலங்கை கடற் பிராந்தியத்தில் நக்கூரமிடப்பட்ட கப்பல் சட்ட விரோதமற்றதா? கடற்படையினர் அறிக்கை

Prasu
2 years ago
இலங்கை கடற் பிராந்தியத்தில் நக்கூரமிடப்பட்ட கப்பல் சட்ட விரோதமற்றதா? கடற்படையினர் அறிக்கை

மட்டக்களப்பு கடற்பரப்பில் ஒரு வாரத்திற்கும் மேலாக நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த இழுவைப்படகு தொடர்பில் கடற்படையினர் அறிக்கையொன்றை விடுத்துள்ளனர்.

குறித்த இடத்தில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்தி உண்மைக்குப் புறம்பானது என கடற்படை தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து பங்களாதேஷின் சிட்டகாங் துறைமுகத்திற்கு சுண்ணாம்புக் கற்களை ஏற்றிச் சென்ற படகு மற்றும் விசைப்படகு என்பன கடற்படையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், கடல் சீற்றம் காரணமாக இழுவைப்படகும் படகும் டிசம்பர் 15ஆம் திகதி முதல் மட்டக்களப்பு கடற்பரப்பில் பாதுகாப்பாக நங்கூரமிடப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.