ஓட்டம் பிடிக்கும் அமைச்சர்கள். ஓட்டை எங்கே உள்ளது?

Keerthi
2 years ago
ஓட்டம் பிடிக்கும் அமைச்சர்கள். ஓட்டை எங்கே உள்ளது?

ஜனாதிபதியின் செயலாளர் பதவியில் இருந்து தம்மை விடுவிக்குமாறு கோரி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கலாநிதி பீ.பீ.ஜயசுந்தர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனது பதவிக்காலத்தில் தான் எதிர்கொண்ட பிரச்சினைகள் மற்றும் சிரமங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு அவர் தனது கடிதத்தில் தெரியப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி எதிர்வரும் ஜனவரி 31ஆம் திகதி பதவியை இராஜினாமா செய்ய அனுமதி கோரவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
[8:08 pm, 25/12/2021] +41 79 700 17 94: கிறிஸ்மஸ் விடுமுறைக்காக உறவினர் வீட்டுக்கு வந்த இளைஞன் ஒருவரை முச்சக்கர வண்டி சாரதிகள் சிலர் கொடூரமாக தாக்கியுள்ளனர். குறித்த இளைஞன் இன்று (25) காலை அவிசாவளையில் இருந்து ஹட்டன் டிக்கோயா பொடைஸ் தோட்டத்திலுள்ள உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார்.

ஹட்டனில் முச்சக்கர வண்டி சாரதிகள் குழுவினால் தாக்கப்பட்டு முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்று மீண்டும் தாக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஹட்டனில் இருந்து பொடைஸ் தோட்டத்திற்கு செல்வதற்காக குறித்த இளைஞன் 600 ரூபா கட்டணத்தில் முச்சக்கர வண்டி ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார்.