கல்கிஸை-காங்கேசன்துறை இடையே புதிய ரயில்!

Prabha Praneetha
2 years ago
கல்கிஸை-காங்கேசன்துறை இடையே புதிய ரயில்!

கல்கிஸையில் இருந்து காங்கேசன்துறை வரை நகரங்களுக்கு இடையிலான புதிய ரயில் ஒன்றை சேவையில் ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

எஸ்13 இயந்திரத்தைக் கொண்ட இந்த ரயில் அடுத்த வருடம் ஜனவரி முதல் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

நேற்று முன்தினம் மருதானையில் இருந்து ரம்புக்கனை நோக்கி 550 பயணிகளுடன் இந்த ரயில் சென்றது.

550 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய இந்த ரயில் நேற்று முன்தினம் போக்குவரத்து பரிசோதனைக்காக மருதானை புகையிரத நிலையத்திலிருந்து ரம்புக்கனை புகையிரத நிலையம் வரை பயணித்துள்ளது.

இந்த ரயிலின் சில பெட்டிகளில் குளிரூட்டல் வசதிகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.