அமைச்சர் பொதுமக்களிடம் விடுத்த கோரிக்கை
Prabha Praneetha
2 years ago
தமது வீட்டுத் தோட்டங்களில் ஏதேனும் பயிர்களை அல்லது மரக்கறி வகைகளை பயிரிடுமாறு அரசாங்கம் கோரிக்கை விடுக்கின்றது.
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ஏதாவது மரக்கறி வகைகளை பயிரிடுமாறு வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன கேட்டுக்கொண்டுள்ளார்.
ஊடகவியலாளர்கள் மத்தியில் நேற்று கருத்துரைத்த போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
நாடு முழுவதும் பயிர் செய்கை தொடர்பான உடனடி வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
எதிர்வரும் ஆண்டு உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்திலேயே, அமைச்சர் இந்த கோரிக்கையை விடுக்கின்றார்.