வாகன இறக்குமதி தடையால் ஏற்பட்டுள்ள மற்றுமொரு பிரச்சினை

Prabha Praneetha
2 years ago
வாகன இறக்குமதி தடையால் ஏற்பட்டுள்ள மற்றுமொரு பிரச்சினை

நாட்டில் விதிக்கப்பட்டுள்ள வாகன இறக்குமதி தடையினால் சிறிய ட்ரக்டர்கள் மற்றும் லொறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வாகன இறக்குமதி தடையால் நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வாக, குறைந்த விலையிலாவது வாகனங்களை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்தச் சங்கம் கோரியுள்ளது.

இதேவேளை சந்தையில் வாகனங்களை போன்று வாகன உதிரி பாகங்களின் விலையிலும் அதிகரிப்பு எற்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனா்.