யாழ்ப்பாணம் இளவாலையில் கிணறு ஒன்றிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு!
Reha
4 years ago
யாழ்ப்பாணம் இளவாலையில் கிணறு ஒன்றிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
சம்பவத்தில் கிளரின் கொல்வின் (வயது- 32) என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த இளைஞன் நேற்று இளவாலையில் நடைபெற்ற விருந்து ஒன்றில் பங்குகொண்டதாக கூறப்படுகின்றது.
மேலும் குறித்த இளைஞரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவிக்கப்படும் நிலையில் இளவாலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே