சுனாமி நினைவுநாளில் வீதி பாதுகாப்பு விழிப்புணர்வு வேலைத்திட்டம் இன்று நடாத்தப்பட்டது (புகைப்படம் உள்ளே)

Prasu
2 years ago
சுனாமி நினைவுநாளில்  வீதி பாதுகாப்பு விழிப்புணர்வு வேலைத்திட்டம் இன்று  நடாத்தப்பட்டது (புகைப்படம் உள்ளே)

இன்று(26/12/2021) இலங்கையின் தேசிய பாதுகாப்பு தின நிகழ்வுகள் (சுணாமி நினைவுநாள்) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 

இதன்போது எமது இலங்கை செஞ்சிலுவை சங்கம் கிளிநொச்சி கிளிநொச்சி மக்கள் அமைப்புடன்(Kili people organisation)இணைந்து நடத்தும் வீதி பாதுகாப்பு விழிப்புணர்வு தொடர்பான வேலைத்திட்டம் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர்  பாராட்டியதுடன்   பின்னர்  இன்று (26/12/2021) போக்குவரத்து பயணத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் கிளிநொச்சி பொதுச்சந்தை உள்ள பொதுமக்கள் என பல்வேறு தரப்பினருக்கு இன்று துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டு வீதி பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வும் வழங்கப்பட்டது