பொலிஸ் கான்ஸ்டபிளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஓஐசிக்கு விள்க்கமறியல்
பொலிஸ் கான்டபிளை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள கந்தர பொலிஸ் நிலைய அதிபர் தலைமை பொலிஸ் பரிசோதகரை நாளை 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நலிந்த அரவிந்த அர்ஜுன விஜயசிங்க என்ற பொலிஸ் பரிசோதகரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று முன்தினம் 25 ஆம் திகதி மாத்தறை நீதவான் உத்தரவிட்டார்.
மாத்தறை சிரே ஸ்ட பொலிஸ் அதிகாரிக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், செய்த விசாரணையின் பின் கந்தர பொலிஸ் நிலைய அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பொலிஸ் நிலைய அதிபரினால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான கானஸ்டபிள் பின்வருமாறு கருத்து தெரிவித்துள்ளார்.
நான் எனது கடமைகளை முடித்துவிட்டு துணிகளை துவைக்கும் போது ஓஐசி அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து கொண்டு என்னை அழைத்தார். நான் கடமை க்கு அழைப்பதாக நினைத்தேன். அவர் அங்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்.
நான் வேண்டாம் என்று சொல்லியும் அவர் என்னை விடவில்லை. பின்னர் அவரிடமிருந்து தப்பி ஓடிவிட்டேன். பின்னர் சிரேஸ'ட பொலிஸ் அதிகாரியிடம் முறைப்பாடு செய்தேன் என தெரிவித்துள்ளார.