கொழும்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பல பகுதிகளில் அவசர நீர் வெட்டு
#water
Prathees
2 years ago
கொழும்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பல பகுதிகளில் 12 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
கொழும்பு, கொட்டாவ, கடுவெல மற்றும் தெஹிவளை கல்கிசை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளிலும், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளிலும், கொட்டிகாவத்தை மற்றும் முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலுமே நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
குறித்த பிரதேசங்களுக்கு நேற்று இரவு 9 மணி முதல் நீர் விநியோகம் தடைப்படும் என சபை தெரிவித்துள்ளது.