நான்காவது ஊசி வழங்க சுகாதார அமைச்சு தீர்மானம்!

#Covid Vaccine
Mayoorikka
2 years ago
நான்காவது ஊசி வழங்க சுகாதார அமைச்சு தீர்மானம்!

கொவிட்  தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட இலங்கையர்களின் தரவுகளை மீளாய்வு செய்ததன் பின் தேவைப்பட்டால் நான்காவது தடுப்பூசி வழங்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கிடைக்கப்பெறும் தரவுகளின் அடிப்படையில் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

தற்போது வரை மூன்றாவது தடுப்பூசியை உரிய முறையில் மக்கள் பெற்றுக் கொள்ளவில்லை. மூன்றாவது தடுப்பூசியை பெற்றவர்களுக்கு சிறிய கால அவகாசம் தேவைப்படுகின்றது.