முகக்கவசம் அணியாத 1,979 பேருக்கு பொலிஸார் எச்சரிக்கை!

Prabha Praneetha
2 years ago
முகக்கவசம் அணியாத 1,979 பேருக்கு பொலிஸார் எச்சரிக்கை!

மேல்மாகாணத்தில் முகக்கவசம் அணியாத குற்றச்சாட்டின் கீழ் 1,979 பேர் பொலிஸாரினால் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

மேல்மாகாணத்தில் சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை கண்காணிக்கும் நடவடிக்கை நேற்று பொலிஸாரினால் பல்வேறு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது 3,012 மோட்டார் சைக்கிள் சாரதிகள், 2,439 முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் 7,352 பாதசாரிகளுக்கு இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.