சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதே ஒரே வழி:-மைத்ரி
Prabha Praneetha
2 years ago
தற்போதைய அரசாங்கம் பொருளாதாரம், அரசியல் மற்றும் சர்வதேச பிரச்சினைகளை ஒன்றாக கலந்து குழம்பியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணப்பட வேண்டுமென இலங்கை எதிர்பார்த்தால், சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை நாட வேண்டும் என வலியுறுத்தினார்.
அரசாங்கத்தின் மோசமான பொருளாதார தீர்மானங்களினால் மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதமடைந்துள்ளதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தான் ஜனாதிபதியாக இருந்த காலத்தை நினைவுகூர்ந்த முன்னாள் ஜனாதிபதி, தனது பதவிக்காலம் முழுவதும் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து பணியாற்றியதாக தெரிவித்தார்.