அவசர சிகிச்சை பிரிவுகளில் உள்ள 186 நோயாளர்கள்!

#Corona Virus
Mayoorikka
2 years ago
அவசர சிகிச்சை பிரிவுகளில் உள்ள  186 நோயாளர்கள்!

நாட்டில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு இதுவரை 186 பேர் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் கொவிட் 19 இணைப்பாளர், வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.

நீரிழிவு, இரத்த அழுத்தம், இருதய நோய் மற்றும் சிறுநீரக நோய் உள்ளிட்ட நீண்டநாள் நோய்க்குள்ளான 4,347 பேர் கொரோனா தொற்று ஏற்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியர் அன்வர் ஹம்தானி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, நேற்று முன்தினம் (27) வரை 942 கொரோனா நோயாளர்கள் ஒக்சிஜனின் உதவியுடன் சிகிச்சை பெறுவதாகவும் சுகாதார அமைச்சின் கொவிட் 19 இணைப்பாளர், வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.