போதைப் பொருட்களுடன் ஸ்ரீ பாத யாத்திரை செல்லும் இளைஞர்கள்

#Police
Prathees
2 years ago
  போதைப் பொருட்களுடன்  ஸ்ரீ பாத யாத்திரை செல்லும்  இளைஞர்கள்

இந்த வார இறுதியில் பல்வேறு போதைப்பொருட்களை சுமந்து கொண்டு ஸ்ரீ பாத யாத்திரைக்கு சென்ற 20 இளைஞர்களை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸ் மோப்ப நாய்களின் உதவியுடன் ஹட்டன் - கொழும்பு வீதியின் தியகல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக ஹட்டன் பொலிஸ் தலைமையகப் பேச்சாளர் தெரிவித்தார்.

அநுராதபுரம், காலி, குருநாகல் ஆகிய இடங்களிலிருந்து போதைப் பொருள்களை போதைப்பொருளுடன் ஸ்ரீ பாத யாத்திரைக்கு வந்த 20 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட இளைஞர்கள் குழுவொன்றே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

ஸ்ரீபாத யாத்திரை என்பது ஒரு புனிதப் பயணம் என்றும், இது ஒரு இன்பப் பயணம் அல்ல என்றும், சில இளைஞர்கள் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பல்வேறு போதைப் பொருள்களை சுமந்து கொண்டும், வேடிக்கை பார்ப்பது வருந்தத்தக்கது என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.