வெறித்தனமாக எந்த ஒரு செயலையும் செய்யக்கூடிய 4 ராசிகள்.

#Astrology
வெறித்தனமாக எந்த ஒரு செயலையும் செய்யக்கூடிய 4 ராசிகள்.

​ரிஷபம்

ரிஷப ராசியினர் அதிகம் பிடிவாத குணம் கொண்டவர்கள் மற்றும் ஒற்றை எண்ணம் கொண்டவர்கள். அதாவது அவர்கள் எதையாவது செய்து முடிக்க வேண்டும் அல்லது யாரோ ஒருவர் மீது வெறி கொண்டால், அவர்களை திசைதிருப்புவது மிகவும் கடினம். அவர்கள் அந்த விஷயத்தை செய்து முடிக்கும் வரை அதற்கு அடிமையாகி விடுபவர்கள். நினைத்ததை அடையும் வரை எளிதில் விட்டுவிடுபவர்கள் அல்ல.

​கடகம்

கடக ராசியினர் தங்களைப் பற்றி நன்கு அறிவார்கள். அதிக உணர்ச்சிமிக்க இவர்கள் ஒரு விஷயத்தை எளிதாக நினைக்கமாட்டார்கள். அதுவே இந்த விஷயத்தை செய்து முடிக்க வேண்டும் என நினைத்துவிட்டால் அதை அடையும் வரை எளிதாக அதைவிட்டு நகரமாட்டார்கள். அது பொருளாக இருந்தாலும் அதை அடையும் வரை அதற்கான முயற்சியில் இருப்பார்கள்.

தன்னைத் தானே வருத்திக் கொண்டாலும் அதன் மீதான வெறி குறையாது.

​விருச்சிகம்

விருச்சிக ராசியினர் எந்த செயலை முடிக்க வேண்டும் அல்லது யார் மீதாவது வெறித்தனமாக இருப்பார்கள்.

செயலை முயற்சிக்க எந்தளவுக்கு பாடுபடுவார்களோ அதே அளவுக்கு அவர்கள் விரும்பிய பெண் அல்லது ஆணை தன் துணையாக அடையும் வரை முயற்சியை மேற்கொள்வார்கள். அந்த விஷயம் அவர்களின் மனது முழுவதும் ஆக்கிரமித்து இருக்கும்.

​மீனம்

மீன ராசியில் பிறந்தவர்கள் படைப்பாற்றல் மிக்கவர்கள். அவர்களைப் பொறுத்தவரை கலைதான் அவர்களை வாழ வைக்கிறது என நினைப்பார்கள்.

ஒரு செயலை செய்து அதில் இன்பம் கிடைத்துவிட்டால் அதே போன்ற செயல்களைத் திரும்ப திரும்ப செய்வார்கள். அதுமட்டுமல்லாமல் ஒரு புதிய விஷயத்தை செய்து முடித்தால் மன அமைதி, திருப்தி கிடைக்கும் என்பதால் இரவும், பகலும் அதற்காக பாடுபடுவார்கள்.
 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!