ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு ஜனவரி முதல் சம்பள உயர்வு!

Prabha Praneetha
2 years ago
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு ஜனவரி முதல் சம்பள உயர்வு!

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்பட்ட சம்பளம் அவர்களுக்கு வழங்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

சம்பள உயர்வுக்கான நடவடிக்கைகள் சம்பளம் மற்றும் ஊதிய ஆணைக்குழு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சின் செயலாளரான பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.