லண்டனில் இருந்து வந்த பெண்ணை கொலை செய்து முதலைக்குப் உணவாக வீசிய நபர் கைது

#Kilinochchi
Prathees
2 years ago
லண்டனில் இருந்து வந்த பெண்ணை கொலை செய்து முதலைக்குப் உணவாக வீசிய நபர் கைது

கிளிநொச்சி, உதயநகர், அம்பாள்குளம் பகுதியில் ஐந்து பிள்ளைகளின் தாயை படுகொலை செய்து முதலைகள் அடங்கிய கால்வாயில் சடலத்தை வீசிய சந்தேகத்தின் பேரில் ஒருவரை கிளிநொச்சி பொலிஸார் இன்று (28) கைது செய்துள்ளனர்.

உயிரிழந்த தாய்  லண்டனில் தனது குழந்தைகளுடன் வசித்து வந்த நிலையில் கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதிக்கு மூன்று வருடங்களுக்கு முன்னர் வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

67 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தாயான இராசேந்திரம் ராஜலட்சுமி அம்பாள்குளம் உதயநகரில் தற்காலிக வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

வீட்டில் இருந்த அவர் நேற்று இரவு முதல் காணவில்லை என அவரது உறவினர்கள் கிளிநொச்சி பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.

பின்னர் தாய் தங்கியிருந்த வீட்டின் தரையில் பல இரத்தக் கறைகளைக் கண்டறிந்த பொலிஸார், குடியிருப்பாளர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் மேலதிக தகவலின் அடிப்படையில் 22 வயதுடைய சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்தனர்.

இதனையடுத்து சந்தேக நபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டதாக தெரியவந்துள்ளது

பெண்ணை கொன்றுவிட்டு உடலை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வீட்டில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கந்தபுரத்தில் உள்ள கால்வாயில் முதலைகளுக்கு உணவாக கொட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் சந்தேகநபரின் தகவலின் பேரில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குறித்த கால்வாய்க்கு சென்றுள்ளனர்

அப்போது கால்வாயில் உரப் பையில்  பெண்ணின் சடலம் மிதந்துள்ளது.

அதேநேரம்இ சடலத்தை கால்வாயில் வீசியதில் வேறு ஒருவருக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.