அனைத்து அரச ஊழியர்களையும் மீள சேவைக்கு அழைக்க தீர்மானம்!

Mayoorikka
2 years ago
அனைத்து அரச ஊழியர்களையும் மீள சேவைக்கு அழைக்க தீர்மானம்!

எதிர்வரும் 3ஆம் திகதி முதல் அனைத்து அரச ஊழியர்களையும் மீள சேவைக்கு அழைப்பதற்கு அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கை இன்று வெளியிடப்படும் என அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

மேலும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக எதிர்வரும் 3ஆம் திகதி முதல் அரச சேவைகள் முழுமையாக முன்னெடுக்கப்படும் என அமைச்சின் செயலாளர்  தெரிவித்தார்.