மத்திய அதிவேக நெடுஞ்சாலை ஜனவரியில் திறந்து வைப்பு!

Mayoorikka
2 years ago
மத்திய அதிவேக நெடுஞ்சாலை ஜனவரியில் திறந்து வைப்பு!

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம முதல் குருநாகல் வரையிலான நெடுஞ்சாலையின் இரண்டாம்
கட்டம் ஜனவரி 15 ஆம் திகதி பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் தெரிவித்துள்ளார்.

4 வழிச்சாலையின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த வீதியின் மீரிகமவிலிருந்து குருநாகல் வரையிலான வீதி தற்போது இலங்கையின் மிக அழகிய அதிவேக நெடுஞ்சாலைப் பிரிவாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. 

மீரிகம, நாகலகமுவ, தம்பொக்க, குருநாகல் மற்றும் யக்கபிட்டிய ஆகிய இடங்களில் பணம் செலுத்தும் கவுன்ட்டர்களுடன் ஐந்து பரிமாற்ற மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

இதற்காக 137 பில்லியன் செலவிடப்பட்டுள்ளது.