பல பில்லியன் ரூபா நோட்டுக்களை அச்சிட்ட மத்திய வங்கி!

Mayoorikka
2 years ago
பல பில்லியன் ரூபா நோட்டுக்களை அச்சிட்ட மத்திய வங்கி!

202 பில்லியன் ரூபாவை இலங்கை மத்திய வங்கி அச்சிட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் 14 ஆம் திகதியின் பின்னர் பணம் அச்சிடப்பட்டுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 825 பில்லியன் ரூபா அச்சிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்றயை தினம் இலங்கை மத்திய வங்கி 48.5 பில்லியன் ரூபா பெறுமதியான முறிகளை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்த போதிலும் அதில் 33.5 பில்லியன் பெறுமதியான முறிகளையே விற்பனை செய்ய முடிந்துள்ளது.