கோதுமை மாவுடன் தடம்புரண்ட ரயில்
#SriLanka
Prathees
2 years ago
கோதுமை மாவை ஏற்றிச் சென்ற ரயில் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திருகோணமலையில் இருந்து சீதுவைக்கு கோதுமை மாவை கொண்டு சென்று, திருகோணமலைக்கு திரும்பும் வழியில் கலவெவ புகையிரத நிலையத்திற்கு அருகில் ரயில் தடம் புரண்டுள்ளது.
ரயில் தடம் புரண்டதன் காரணமாக கல்நேவ - விஜிதபுர வீதியின் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் ரயில் தண்டவாளம் பலத்த சேதமடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் சய்திகள் தெரிவிக்கின்றன.