வளவ ஆற்றுப் பாலத்தின் கீழ் கண்டெடுக்கப்பட்ட இரண்டு மண்டை ஓடுகள்
#Police
Prathees
2 years ago
இரத்தினபுரி மாவட்டத்தில், பதலங்கல வளவ ஆற்றுப் பாலத்தின் கீழ் இரண்டு மனித மண்டை ஓடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மண்டை ஓடுகள் இரண்டும் இன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக குட்டிகல பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த இரண்டு மண்டையோடுகளுடன் கூடிய எலும்புகளை யாரோ வளவ ஆற்றுப் பாலத்தின் கீழ் கொண்டு வந்திருக்கலாம் என பொலிஸாரால் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், குறித்தசம்பவம் தொடர்பாக குட்டிகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.