ஒரு வருடத்தின் பின் உரத்தைப் பெற்ற தேயிலை விவசாயிகள்: விலை ஐந்து மடங்காக உயர்வு

#SriLanka
Prathees
2 years ago
ஒரு வருடத்தின் பின் உரத்தைப் பெற்ற தேயிலை விவசாயிகள்: விலை ஐந்து மடங்காக உயர்வு

ஒரு வருடத்தின் பின்னர் பலாங்கொடை பிரதேசத்தில் உள்ள பல தேயிலை விவசாயிகள் தேயிலைக்கான  உரத்தைப் பெற்றுள்ளனர்.

 50 கிலோகிராம் தேயிலை உர மூட்டையின் விலை சுமார் 8000 ரூபாய் எனவும், அது ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதாகவும் உரத்தைப் பெற்றுக்கொண்ட தேயிலை விவசாயிகள்  தெரிவித்துள்ளனர்.

ஓராண்டுக்கு முன்பு ரூ.1500 ஆக இருந்த 50 கிலோ எடை கொண்ட உர மூட்டையின் விலை 5 மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

பசுந்தேயிலை இலைகளை விநியோகிக்கும் தேயிலை வியாபாரிகளால் உரம் கொண்டு வரப்பட்டதாக தேயிலை விவசாயிகள் தெரிவித்தனர்.

 மேலும் இலங்கை செய்திகளைப்   பார்வையிட இதில் கிளிக் செய்யவும்.