பிச்சை எடுக்கும் நாடாக மாறியுள்ள இலங்கை!

Mayoorikka
2 years ago
பிச்சை எடுக்கும் நாடாக மாறியுள்ள இலங்கை!

தற்போது இலங்கை பிச்சை எடுக்கும் நாடாக மாற்றப்பட்டுள்ளதாக ஐக்கிய பிரஜைகள் முன்னணியின் அழைப்பாளர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.

  ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

 அரசாங்கம் தொடர்ந்தும் உலகம் முழுவதிலும் சென்று கடன் பெற்று வருவதாகவும், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவும் கடன்களைப் பெற்றுக்கொள்வதற்காக உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருவதைக் காணக்கூடியதாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், தற்போது இலங்கை, பங்களாதேஷ் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளிடமும் கடன்களை பெற்றுக்கொள்ள எண்ணி பிச்சை எடுக்கும் நாடாக தன்னை மாற்றிக்கொண்டுள்ளதாக பெரேரா சுட்டிக்காட்டினார்.