இந்தியா சென்று ஷிவந்நியாவை சந்திக்க வீட்டை விட்டு வெளியேறிய சிறுமிகள் கைது

#Police
Prathees
2 years ago
இந்தியா சென்று ஷிவந்நியாவை சந்திக்க வீட்டை விட்டு வெளியேறிய சிறுமிகள் கைது

இந்திய சினிமா நடிகர்கள் சந்திக்க செல்கிறோம் என்று கூறி தங்கள் வீட்டை விட்டு ஓடிய மூன்று சிறுமிகள் நேற்று (31) பிற்பகல் ஹொரவ்பத்தான பிரதேசத்தில்  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

13, 11 மற்றும் 07 வயதுடைய மூன்று சிறுமிகளும் இந்திய தொலைக்காட்சி நாடகங்களைப் பார்க்கும் பழக்கம் கொண்டவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து படகு மூலம் இந்தியா செல்லும் நோக்கில் தப்பிச் சென்றதாக சிறுமிகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

நடிகைகளை சந்திக்க இந்தியா செல்லும் சிறுமிகளிடம் அப்போது சுமார் ரூ.1200 இருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

நேற்று அதிகாலை 4.30 மணியளவில் குறித்த சிறுமிகள் மூவரும் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

உறவினர்களான இந்தப் பெண்கள் ஹொரவ்பத்தானையில் இருந்து திருகோணமலை செல்லும் பேருந்தில் ஏறி கெபித்திகொல்லாவயில் இறங்கியுள்ளார்.

இருவரும் இந்தியாவுக்கான வழித் திட்டங்களைக் கூட தமது கையடக்கத் தொலைபேசிகளில் இருந்து பெற்றுக்கொண்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சிறுமிகள் கெபிதிகொல்லேவ பிரதேசத்தில் வழி தவறி ஹொரவ்பத்தானைக்கு திரும்பியுள்ளனர்.

தமது பிள்ளைகளை காணவில்லை என அவர்களது பெற்றோர் ஹொரவ்பத்தனை பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இதன்படி, குறித்த சிறுமிகளைக் கண்டறிய விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், அவர்கள் ஹொரவ்பத்தனையில் சுற்றித் திரிந்த வேளையில் அவர்களைக் கைது செய்தனர்.

இந்திய தொலைக்காட்சி நாடகங்களைப் பார்ப்பதற்கு அடிமையாகிவிட்டதாகவும், அந்த நாடகத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் ஷிவந்நியா உட்பட மூன்று இந்திய கலைஞர்களை சந்தித்து பேச ஆவலாக இருப்பதாகவும் சிறுமிகள் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மற்றும் இந்தியாவுக்கு சென்று நடிகைகளை சந்திக்கும் நோக்கில் வீட்டை விட்டு ஓடியதாக மூன்று சிறுமிகளும் மேலும் தெரிவித்துள்ளனர்.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்