இலங்கையில் பல எரிவாயு நிறுவனங்களை உருவாக்க வேண்டும்;-திலும் அமுனுகம

Prabha Praneetha
4 years ago
இலங்கையில் பல எரிவாயு நிறுவனங்களை உருவாக்க வேண்டும்;-திலும் அமுனுகம

இலங்கையில் பல எரிவாயு நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

நாட்டில் எரிவாயு துறையில் வேறு பல வர்த்தக நிறுவனங்கள் இருந்திருந்தால், தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை ஏற்பட்டிருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் சிந்தித்து அரசாங்கம் இந்த வருடம் செயற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் வர்த்தக நிறுவனங்கள் தமது தொழிலை விரிவுபடுத்துவதற்காக குழம்பிய குட்டையில் மீன்பிடித்துக் கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வர்த்தக துறையில் ஒரு பிரச்சனை உள்ளது. நாம் பொய் சொல்ல முடியாது. உண்மையைச் சொல்ல வேண்டும். எரிவாயு வர்த்தகத்தில் இருப்பவர்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்த முயற்சி செய்கிறார்கள்.

இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக மக்கள் மத்தியில் அரசாங்கம் பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுக்கிறது. 

நாமும் எப்படியாவது இன்னும் நான்கு அல்லது ஐந்து நிறுவனங்களை எரிவாயு தொழிலில் சேர்க்க வேண்டும். அப்படி நடந்தால் இந்தக் கதையை நாம் கேட்க வேண்டியதில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் வர்த்தக நிறுவனங்கள் தமது தொழிலை விரிவுபடுத்துவதற்காக குழம்பிய குட்டையில் மீன்பிடித்துக் கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வர்த்தக துறையில் ஒரு பிரச்சனை உள்ளது. நாம் பொய் சொல்ல முடியாது. உண்மையைச் சொல்ல வேண்டும். எரிவாயு வர்த்தகத்தில் இருப்பவர்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்த முயற்சி செய்கிறார்கள்.

இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக மக்கள் மத்தியில் அரசாங்கம் பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுக்கிறது. 

நாமும் எப்படியாவது இன்னும் நான்கு அல்லது ஐந்து நிறுவனங்களை எரிவாயு தொழிலில் சேர்க்க வேண்டும். அப்படி நடந்தால் இந்தக் கதையை நாம் கேட்க வேண்டியதில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும் 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4