கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

Prabha Praneetha
2 years ago
கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

மாணவர்கள் புதிய வகுப்புகளுக்கு  உயர்த்தப்பட்டுள்ள போதிலும், கடந்த தரங்களில் விடுபட்ட பாடங்களையும் பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கல்வித்துறையின் அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளாா்.

பாடத்திட்டங்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இது முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளாா்.

2022 ஆம் ஆண்டின் முதலாம் தவணை நாளை  (03) ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்