இரு மாதங்களில் சுற்றுலாதுறை இயல்புநிலைக்கு

Prabha Praneetha
2 years ago
இரு மாதங்களில் சுற்றுலாதுறை இயல்புநிலைக்கு

ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதத்திற்குள் சுற்றுலா துறை இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கிறோம் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஜனவரி மாதத்தில் சுமார் ஒரு இலட்சத்திலிருந்து ஒரு இலட்சத்து 25ஆயிரம்  சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளாா்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளாா்.

எவ்வாறாயினும், நாடு வழமைக்குத் திரும்புவதற்கு குறைந்தது 2 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும், மத்திய கிழக்கு மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வரவழைத்து நாட்டை தற்போதுள்ள நிலைக்கு கொண்டு வர எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளாா்.

மேலும் பேசிய அமைச்சர், ஜனவரி முதல் டிசம்பர் வரை சுமார் 180,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்ததாகவும், அதில் 86,000 பேர் டிசம்பர் மாதத்தில் மட்டும் வருகை தந்திருப்பது சிறந்த போக்கை பிரதிபலிப்பதாகவும் அவர் கூறியுள்ளாா்.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்