அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பம்
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று (03) ஆரம்பமாகவுள்ளன.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 23ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதுடன், இன்று முதல் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய பாடசாலைகளை திறக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.
கொவிட் தொற்றுநோய் காரணமாக சுமார் 6 மாதங்களாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதால் 2021 ஆம் ஆண்டு இறுதிக்குள் பாடசாலை விடுமுறைகளை 10 நாட்களாக மட்டுப்படுத்த கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
பாடசாலைகளை ஆரம்பித்து பராமரிக்கும் போது 27 மாணவர்களுக்கு மேல் உள்ள வகுப்பறைகளில் மாணவர்களை வகுப்புகளுக்கு அழைக்குமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
இன்று முதல் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டாலும், 2021 ஆம் ஆண்டு கல்வியாண்டு ஏப்ரல் 08 ஆம் திகதி வரை இயங்கும் என்பதால் தரம் உயர்த்தப்பட மாட்டாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, அரச சேவையின் அலுவலகப் பணிகள் இன்று முதல் வழமை போன்று ஆரம்பிக்கப்படும்.
புத்தாண்டு ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்று முதல் அனைத்து அரச ஊழியர்களையும் வழமை போன்று பணிக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.