பிள்ளைகளை நிர்வாணமாக்கி மிளகாய் தூள் தூவி சித்திரவதை செய்த தந்தை கைது!

Mayoorikka
2 years ago
பிள்ளைகளை நிர்வாணமாக்கி மிளகாய் தூள் தூவி சித்திரவதை செய்த தந்தை கைது!

தமது பிள்ளைகளை மரத்தில் கட்டி வைத்துத் தாக்கிய தந்தை ஒருவர் ஹட்டன் – குடாகம பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

7 வயதான மகளையும் 5 வயதுடைய தமது மகனையுமே அவர் இவ்வாறு தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இருவரையும் நிர்வாணமாக்கி, சரீரத்தில் மிளகாய்த் தூளைத் தூவி அவர் சித்திரவதைக்கு உட்படுத்தியமை தெரியவந்துள்ளது.

இந்த சம்பத்தையடுத்து சந்தேகநபர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.