2022 இல் மூன்று லட்சம் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள்
2022 ஆம் ஆண்டுக்குள் 300,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலைக்காக வெளிநாடு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு சுமார் 120,000 தொழிலாளர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக பதிவு செய்ய முடிந்தது.
கோவிட் தொற்றுநோய்களின் போது, பல நாடுகள் நெருக்கடிகளை எதிர்கொண்டபோது, வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையை எந்தவித தடையும் இன்றி வெற்றிகரமாக எடுத்துச் செல்ல முடிந்ததாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
புத்தாண்டு கடமைகளை ஆரம்பித்து வைத்து இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊழியர்களிடம் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 850 தொழிலாளர்களை பதிவு செய்யும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாகவும் அந்த இலக்கை அடைய அனைத்து அதிகாரிகளும் உறுதியுடன் இருக்க வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.