இலங்கையில் ஓமிக்ரோனின் சமூக பரவல் ஆரம்பம்!
Mayoorikka
2 years ago
கொரோனா வைரஸின் ஒமிக்ரான் மாறுபாட்டின் சமூகப் பரவல் இலங்கையில் ஆரம்பித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, மூன்றாவது டோஸ் கொரோனா தடுப்பூசியானது, கொரோனா வைரஸின் ஒமிக்ரான் மாறுபாட்டால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு எதிராக 88 சதவீதம் வரை பாதுகாப்பை வழங்குவதாக இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் ஆரம்ப முடிவுகளில் தெரியவந்துள்ளது.