மருந்து தட்டுப்பாடு குறித்து வெளியான அறிவிப்பு
Prabha Praneetha
2 years ago
மருந்து இறக்குமதி நிறுவனத்திடமுள்ள மருந்து தொகை இன்னும் இரண்டரை மாதங்களுக்கே போதுமானதாக இருக்குமென மருந்து இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனா்.
எதிர்காலத்தில் மருந்துகள் தொடர்பில் நெருக்கடி நிலை ஏற்படுமென்றும் மருந்து இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனா்.
தற்போது அரச மருத்துவமனைகளில் மருந்துக்கு தட்டுப்பாடு இல்லாவிட்டாலும், இறக்குமதியாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படாவிட்டால் எதிர்வரும் சில மாதங்களில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்