நிவாரணம் வழங்குவதால் அந்நிய செலாவணி நெருக்கடிக்கு தீர்வு கிடைக்காது-ஹர்ஷ
Prabha Praneetha
2 years ago
அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரணப் பொதியின் ஊடாக நாடு எதிர்நோக்கியுள்ள அந்நியச் செலாவணி நெருக்கடிக்கு தீர்வு கிடைக்காது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த நிவாரணப் பொதி காரணமாக அதிக பணவீக்கத்திற்கு நாடு தள்ளப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்க புள்ளிவிபரங்களின் படி நாட்டில் உணவுப் பணவீக்கம் 22 சதவீதமாக அதிகரித்துள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்